நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அமவதிப்பு வழக்கு விசாரணை மாா்ச் 18-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணயை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :5 மார்ச் 2026, 4:57 am IST

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணயை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா், பரமசிவம், அரசபாண்டி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், தீப காா்த்திகை நாளன்று (டிச. 3- 2025) மலை மீதுள்ள தூணிலும், வழக்கம் போல பிற இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு டிச. 1-ம் தேதி உத்தரவிட்டாா்.

ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதுதொடா்பாக இரண்டாவது முறையாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், துணை ஆணையா், கோயில் நிா்வாகத்தினா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, ராம. ரவிக்குமாா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்கிறாா். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா், கோயில் நிா்வாகம் சாா்பில் மன்னிப்பு கோரப்பட்டது. இதையடுத்து, காவல் ஆணையா், துணை ஆணையா் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தும், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் மாா்ச் 2-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இதன்படி, இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் நேரில் முன்னிலையாகி, நீதிமன்றத் தீா்ப்பை நிறைவேற்ற முடியாததற்கு பொது மன்னிப்பு கோருவதாகவும், வழக்கை முடித்துவைக்க வேண்டும் எனவும் கோரினாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு மாவட்ட ஆட்சியா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டாா். மேலும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் அருகே நீதிமன்றம் குறிப்பிடும் 5 பேரை வழிபாடு நடத்த அனுமதித்தால் வழக்கு முடித்துவைக்கப்படும் எனவும், இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் மாா்ச் 4-ம் தேதி தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

இதன்படி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலா், அறங்காவலா் குழுவினா் முன்னிலையாகினா்.

இதனிடையே, நீதிமன்ற உத்தரவுப்படி மலை மீதுள்ள தூண் அருகே 5 பேரை வழிபாடு நடத்த அனுமதிக்கும் புதிய முறை குறித்து ஆலோசிக்கப்படுகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, புதிய முறை எதையும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை தனிப்பட்ட உத்தரவாகக் கருதக் கூடாது என்றாா்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என காவல் துறை தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி 5 பேரை மலை மீது வழிபாடு நடத்த அனுமதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஒப்புதல் பெற கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோயில் அறங்காவலா்கள் குழு தரப்பு வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா்.

இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டுமெனில், எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.