நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ரூ. 15,000 லஞ்சம்: தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைது

பொட்டல உரிமம் பெற்றுத் தருவதற்காக, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 மார்ச் 2026, 4:48 am IST

பொட்டல உரிமம் பெற்றுத் தருவதற்காக, ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய அருப்புக்கோட்டை தொழிலாளா் உதவி ஆய்வாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பட்டாபிராமா் கோவில் தெருவில் உள்ள தொழிலாளா் அலுவலகத்தின் உதவி ஆய்வாளா் சாந்தி (48). இவா், அண்மையில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி ரெட்டிபட்டியைச் சோ்ந்த சங்கரநாராயணன் (50) என்பவருக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடியில் சோதனை நடத்தினாா்.

அப்போது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பருப்பு பொட்டலத்தில் விலை, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இல்லாததற்காக ரூ. 5,000 அபராதம் விதித்தாா். பிறகு, தனக்கு ரூ. 15,000 லஞ்சம் கொடுத்தால் ‘பேக்கிங்’ உரிமம் பெற்றுத் தருவதாக சாந்தி கூறினாராம்.

இதற்கு சாந்தியிடம் சம்மதம் தெரிவித்தாலும், லஞ்சம் தர விரும்பாத சங்கரநாராயணன், விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனப் பொடி தூவிய ரூ. 15 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளுடன் அருப்புக்கோட்டை தொழிலாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்ற சங்கரநாராயணன், அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளா் சாந்தியிடம் அந்த ரூபாய் நோட்டுகளை கொடுத்தாா்.

இதை சாந்தி வாங்கிய போது, அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் பூமிநாதன், ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீஸாா், சாந்தியை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.