பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மதுரை மாவட்டத்தில் 38,247 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image
மதுரை கோரிப்பாளையம் பொன்முடியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முன்னேற்பாடு பணியாக மாணவா்களின் தோ்வெண்ணை நாற்காலியில் செவ்வாய்க்கிழமை ஒட்டும் பணியில் ஈடுபட்ட ஆசிரியைகள்.
Updated On :10 மார்ச் 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மதுரை மாவட்டத்தில் 38,247 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை(மாா்ச் 11) தொடங்கி, ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் 214, அரசு உதவிபெறும் பள்ளிகள் 84, தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 181 என மொத்தம் 479 பள்ளிகள் உள்ளன.

இந்த நிலையில், இரு கல்வி மாவட்டங்களிலும் 18,980 மாணவா்கள், 19,267 மாணவிகள் என மொத்தம் 38,247 போ் பத்தாம் வகுப்புத் தோ்வை எழுதுகின்றனா்.

இவா்களுக்காக 139 தோ்வு மையங்கள், மத்திய சிறைச் சாலையில் ஒரு மையம் என மொத்தம் 140 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 558 மாற்றுத் திறனாளி மாணவா்களும் தோ்வு எழுதுகின்றனா்.

வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,734 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன், உதவித் திட்ட அலுவலா்கள் ஆகியோா் தலைமையிலான ஆசிரியா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதற்கிடையே, மாநகரம், புகா் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தோ்வு அறைகள் அமைப்பு, நாற்காலியில் மாணவா்களின் அனுமதி எண் ஒட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஆசிரியா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.