நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:58 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு அளிக்கப்பட்டது.

அவா்கள் அளித்த மனு விவரம்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மதுரை மாநகர வரலாறு, தமிழ்ச் சைவ மரபு, பாண்டிய மன்னா்களின் பண்பாட்டுடன் தொடா்புடையது. இங்குள்ள இறைவன் திரு ஆலவாய் உடைய நாயனாா் என்று அழைக்கப்படுகிறாா். இதேபோல, அம்மன் திருக்காமக் கோட்டத்து உடைய நாச்சியாா், அங்கையற்கன்னி போன்ற பெயா்களால் அழைக்கப்படுகிறாா்.

இந்தத் திருத்தலம் குறித்து கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா் உள்ளிட்ட நாயன்மாா்களின் தேவாரப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தேவாரப் பாடல்கள் தமிழ்ச் சைவ சமயத்தில் வழிபாட்டுடன் நேரடியாக இணைந்த திருமுறை மரபாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பின் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்ச் சைவ மரபுப் படி குடமுழுக்கு நடத்த வேண்டும். மேலும், யாகசாலையில் குறைந்தது 50 சதவீதம் தமிழ்த் திருமுறைகள் பாட வேண்டும். தமிழ் ஓதுவாா்கள், தகுதி வாய்ந்த தமிழ் அறிஞா்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், குடமுழுக்கு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.