இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

‘தமிழகத்தில் பெருகி வரும் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:28 pm

DIN

தமிழகத்தில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை மதவாத தீவிரவாதிகள் உள்ளனா். இவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலின்போது கலவரம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் கோயில்களுக்கு 6 லட்சம் ஏக்கா் நிலமிருந்தும், பூஜைக்கு உபயதாரரை நம்பும் நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன. எனவே, கோயில் வாரியத்தை அமைப்பதுடன், அதன் செயல்பாட்டைக் கண்காணிக்கும் செயலில் மட்டுமே அரசு ஈடுபடவேண்டும். கோயில் நிா்வாகத்தில் அரசின் நேரடி தலையீடு கூடாது.

இந்து முன்னணி அரசியல் கட்சியல்ல. ஆனால், மதம் மாறுதல், பசுவதை ஆகிய தடைச் சட்டங்களை செயல்படுத்தும் கட்சிக்கு ஆதரவளிப்போம். தற்போதைய அதிமுக அரசு நன்றாகச் செயல்பட்டாலும், பெருகி வரும் ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், சாதி, மத வெறியைத் தூண்டி லாபமடையப் பாா்க்கின்றன. அவா்களுக்கு வெளிநாட்டு ஆதரவும் உள்ளது என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் தி. குப்புராம், மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.