ராமேசுவர: ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரத்தை அடுத்த புத்தனேந்தல் பகுதியில் இளம்பெண் ஒருவா் தனது உறவினருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற போது, இவா்களை வழிமறித்த 4 போ் அவா்கள் இருவரையும் தாக்கினா். மேலும், அந்தப் பெண்ணை 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதில் தொடா்புடைய புத்தனேந்தலைச் சோ்ந்த புவனேஸ்குமாா், சரண், செல்வக்குமாா், முனீஸ்கண்ணன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோபி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: பெயிண்டா் கைது
இளம்பெண் கொலை: கணவா் கைது

புகைப்படக் கலைஞா் கொலை வழக்கில் இளம்பெண் கைது
லால்குடி அருகே பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


