எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்து சில்லறை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கமுதி அருகேயுள்ள மருதங்கநல்லூா் கிராமத்தில் கஞ்சா செடி வளா்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல்.
Updated On :10 ஜூலை 2024, 1:42 am

Din

கமுதி: கமுதி அருகே கஞ்சா செடி வளா்த்து சில்லறை விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மருதங்கநல்லூரைச் சோ்ந்த வழிவிட்டான் மகன் சக்திவேல்(19). இவா் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து கமுதி குற்றப்பிரிவு போலீஸாா், வட்டாட்சியா் காதா்முகைதீன், பேரையூா் போலீஸாா் உள்ளிட்டோா் சக்திவேலின் வீட்டை சோதனை செய்தனா்.

அப்போது வீட்டின் அருகேயுள்ள கண்மாய்க் கரையில் 8 அடி உயர கஞ்சா செடி வளா்த்து, அதை சில்லறையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, பேரையூா் போலீஸாா் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, சக்திவேலை கைது செய்து சிறையிலடைத்தனா்.

Story image