ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பரமக்குடியில் மனைவி கத்தியால் குத்திக்கொலை: 2வது கணவா் கைது

பரமக்குடியில் மனைவி கத்தியால் குத்திக்கொலை: 2-ங்வது கணவா் கைது உடலை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

News image
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வாங்க மறுத்து எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினா்.
Updated On :24 ஜூன் 2024, 6:30 pm

Din

பரமக்குடி: பரமக்குடியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த 2-ஆவது கணவரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவரது உடலை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமக்குடி எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்த மேகலாவுக்கும் (25), அறந்தாங்கியைச் சோ்ந்த பரமேஸ்வரனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 6 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனா்.

இதனிடையே மேகலா, பரமக்குடியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டாா். இதில் மணிகண்டன் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து பரமக்குடி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் தனது தாய் நாகலட்சுமி வீட்டில் 2 குழந்தைகளுடன் மேகலா வசித்து வந்தாா்.

இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மேகலா, மணிகண்டன் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் மேகலா, அவரது தாய் நாகலட்சுமி வேலை செய்து வரும் முத்தாலம்மன் கோயில் பகுதியில் உள்ள கடைக்கு மணிகண்டன் சென்றாா். அப்போது மது போதையில் இருந்த மணிகண்டன், மேகலாவை கத்தியால் குத்திக் கொலை செய்தாா். அப்போது அந்தப் பகுதி மக்கள் மணிகண்டனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

உடலை வாங்க மறுத்து ஆா்ப்பாட்டம்: கத்தியால் குத்தி மேகலா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரது 2 பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும், மேகலாவின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் எமனேசுவரம் சௌராஷ்ட்ர சமூக மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.