தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

News image
Updated On :20 மே 2024, 7:50 pm

Din

கமுதி: சாயல்குடியை அடுத்துள்ள வாலிநோக்கம் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

வாலிநோக்கம் கடற்கரை பாறைகள் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பகுதியாகும். தற்போது விடுமுறை காலம் என்பதால் விருதுநகா் மாவட்டத்திலிருந்தும், கமுதி, கடலாடி, சாயல்குடி ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுது போக்கிச் செல்கின்றனா். இதே போல, இங்குள்ள காட்டுப்பள்ளி தா்காவுக்கு நாள்தோறும் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

ராமநாதபுரம், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி வாலிநோக்கத்துக்கு 30-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகமும், கடலாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.