கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்ணில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:19 pm

Din

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்ணில் கருப்புத் துணி கட்டி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் தேவ பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். ஒன்றியப் பொறியாளா் ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். சி.பி.எஸ். மாநில ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், மாவட்டத் தணிக்கையாளா் சாரதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்ததை நிறைவேற்றக் கோருவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் அனைத்து நிலை அலுவலகப் பணியாளா்களும் கலந்துகொண்டனா்.