இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசி லாரிகளுடன் மீட்பு: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் 2 லாரிகளில் கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசியை திங்கள்கிழமை மீட்ட போலீஸாா் ஒருவரை கைது செய்து, 3 பேரை தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2024, 6:30 pm

Vishwanathan

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் 2 லாரிகளில் கடத்தப்பட்ட 50 டன் ரேசன் அரிசியை திங்கள்கிழமை மீட்ட போலீஸாா் ஒருவரை கைது செய்து, 3 பேரை தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 21 பெட்டிகளில் 26,344 டன் அரிசி கடந்த ஆக. 30- ஆம் தேதி ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. இதை லாரிகளில் ஏற்றி எடை போட்டு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றது. அப்போது இரு லாரிகளில் 50 டன் ரேசன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லாமல் கடத்தப்பட்டதாக ஒப்பந்ததாரா் ரவி ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, நரிப்பையூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சண்முக சுந்தரத்தை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா். அப்போது 50 டன் ரேசன் அரிசியையும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இறக்கிவிட்டு லாரிகள் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கடத்திச் செல்லப்பட்ட 50 டன் ரேசன் அரிசியையும், 2 லாரிகளையும் தனிப்படை போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக மற்றொரு லாரி ஓட்டுநா் உள்பட 3 பேரை தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.