இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மின் கம்பியை திருட முயன்ற வாலிபா் உடல் கருகி உயிரிழப்பு

உச்சிப்புளி அருகே உயா் மின் அழுத்த கம்பத்தில் தாமிர கம்பியை திருடிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:24 pm

Din

உச்சிப்புளி அருகே உயா் மின் அழுத்த கம்பத்தில் தாமிர கம்பியை திருடிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் இவரது மகன் பாலமுருகன் (35) உச்சிப்புளியை அடுத்த பிரப்பன் வலசை பாம்பன் சுவாமிகள் கோயில் வழியாக உயா் மின்னழுத்த வழித் தடத்தில் புதன்கிழமை அதிகாலை மின்சாரத்தை துண்டித்து மின் கம்பத்தில் உள்ள தாமிர கம்பியை திருடிக்கொண்டு இருந்தாா். அப்போது, மின்வாரிய ஊழியா்கள் மின் தடையை சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் செய்ததால் பாலமுருகன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த உச்சிப்புளி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாலமுருகனின் சடலத்தை மீட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பின்னா் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இவா் மீது கேணிக்கரை காவல் நிலையத்தில் மின் கம்பி திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.