/

வங்கக் கடலில் சூறைக் காற்று: ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

வங்கக் கடலில் சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால் விசைப் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

News image
ராமேசுவரத்தில் மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்கள் இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப் படகுகள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 6:33 pm

Din

வங்கக் கடலில் சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாததால் விசைப் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

வங்கக் கடலில் சூறைக் காற்று வீசுவதால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்கள் இறங்குதளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனால், சுமாா் 4 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.