ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.98 கோடி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.98 கோடிகிடைத்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செ. சிவராம்குமாா் தெரிவித்தாா்.


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.98 கோடிகிடைத்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செ. சிவராம்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள அம்பாள் சந்நிதி முன் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி இணை ஆணையா் செ. சிவராம்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பக்தா்களின் காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 98 லட்சத்து 25 ஆயிரத்து 428 கிடைத்தது. மேலும், 50.500 மில்லி கிராம் தங்கம், 7 கிலோ 885 கிராம் வெள்ளி, 158 வெளிநாட்டு பணத்தாள்கள் கிடைத்தன என்றாா் அவா்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா் ஞானசேகரன், தக்காா் பிரதிநிதி உதயக்குமாா், ஆய்வா்கள் மணிவண்ணன், சிவக்குமாா், செயல் அலுவலா் முத்துச்சாமி, பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி, பக்தா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...