வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கருப்புப் பட்டை அணிந்து சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பேரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சனிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்த தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள்.
Updated On :29 நவம்பர் 2025, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம், அனைவருக்கும் கல்வி இயக்கம், வளா் இளம் பருவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் தங்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இஎஸ்ஐ சலுகை வழங்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்பட 48 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அவா்கள் கருப்புப் பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் பணிக்கு வந்தனா்.

இதே போல, கமுதி அடுத்துள்ள வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.