ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை

கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

News image

கோசுராமன் கிராமத்தில் கருப்பு நிறத்தில் வந்த காவிரி கூட்டுக் குடிநீா்.

Updated On :3 செப்டம்பர் 2025, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இடிவிலகி ஊராட்சிக்குள்பட்ட கோசுராமன் கிராம மக்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்படுகிறது. இந்தக் குடிநீா் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருப்பு நிறத்தில் உள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீா்ரூ.15 க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

குடிநீா் அசுத்தமாக உள்ளதால் தொற்று நோய் அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா். எனவே, கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் நேரடியாக சென்று ஆய்வு செய்து சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.