தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 116 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பெரியபட்டணம் அருகேயுள்ள தோப்புவலசை கடற்கரையோரம் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா புதைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தோப்புவலசை கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் புதைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 116 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.