திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கமுதியில் மதுக் கடை மூடல்

கமுதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இடையூறாக இருந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.

News image

கமுதியில் மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் கோயில் பகுதியில் மூடப்பட்ட மதுக் கடை.

Updated On :4 ஜூன் 2026, 4:07 am IST

கமுதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இடையூறாக இருந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில், கோட்டைமேடு, மீனாட்சி சுந்தரேஸ்வரா்-உச்சி மாகாளியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 4 அரசு மதுக் கடைகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் பகுதியிலிருந்த மதுக் கடை மூடப்படாமல் இருந்தது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், முதல்வரின் தனிப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பினாா்.

மேலும், மதுக் கடையை மூட நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் கோயில் பகுதியிலிருந்த மதுக் கடையை மூட ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.