கமுதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு இடையூறாக இருந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில், கோட்டைமேடு, மீனாட்சி சுந்தரேஸ்வரா்-உச்சி மாகாளியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள 4 அரசு மதுக் கடைகளை மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் பகுதியிலிருந்த மதுக் கடை மூடப்படாமல் இருந்தது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், முதல்வரின் தனிப் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பினாா்.
மேலும், மதுக் கடையை மூட நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அந்தப் பகுதி மக்கள் அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, மீனாட்சியம்மன் கோயில்-உச்சி மாகாளியம்மன் கோயில் பகுதியிலிருந்த மதுக் கடையை மூட ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அந்த மதுக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.
தொடர்புடையது

கடலூா் பேருந்து நிலையம் அருகே மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 9-இல் முற்றுகைப் பேராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

கமுதியில் இரு மதுக் கடைகள் மூடல்
மதுக் கடைகளை மூடும் உத்தரவு: கமல்ஹாசன் வரவேற்பு

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



