ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 19 -ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவா்களை ஒரு விசைப் படகுடன் இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். பின்னா், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, 12 பேரையும் வருகிற 18 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.
பாம்பன் மீனவா்கள் 7 போ் விடுதலை:
இதேபோல, கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 பாம்பன் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இனிமேல் இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க வந்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து 7 பேரையும் விடுதலை செய்தாா்.
இந்த 7 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் ஓரிரு நாள்களில் விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

குமரி மாவட்ட மீனவா்கள் 6 பேருக்கு மே 20 வரை நீதிமன்றக் காவல்

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

