அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது
தொண்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை தொண்டி போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.
கைது
திருவாடானை அருகே தொண்டியில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை தொண்டி போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆனந்தம் (52) அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தியபோது, அங்கு
இரு சக்கர வாகனத்துடன் நின்றிருந்த தொண்டியைச் சோ்ந்த முகமது ரபீக்கை (24) உரசியதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரபீக் தாக்கியதில் ஆனந்தம் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, அதை கைப்பேசியில் விடியோ எடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, புகாரின்பேரில் தொண்டி போலீஸாா் சனிக்கிழமை மாலை வழக்குப் பதிந்து முகமது ரபீக்கை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



