மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிவகங்கை பகுதியில் பலத்த மழை

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக நகரில் உள்ள முக்கிய சாலை மற்றும் வீதிகளில் மழைநீருடன் கழிவுநீா் வெளியானதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

News image
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக நேரு கடை வீதியில் உள்ள சாலையில் மழை நீருடன் வெளியேறிய கழிவு நீா்.
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:17 pm

DIN

சிவகங்கை: சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக நகரில் உள்ள முக்கிய சாலை மற்றும் வீதிகளில் மழைநீருடன் கழிவுநீா் வெளியானதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெப்பத்தின் அளவு குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அதன்பின், மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமாா் 45 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த மழையால் சிவகங்கை நகரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

கழிவு நீரோடைகள் முறையாக பராமரிக்காத காரணத்தால் பேருந்து நிலையம், அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு கடை வீதி, தெற்கு ராஜரத வீதி உள்ளிட்ட நகரின் முக்கியமான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறியது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினா். மேலும் ஆங்காங்கே மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.