அழகப்பா பல்கலைக் கழகத்தில் இணையவழிக் கருத்தரங்கு

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் கொவைட்-19 பெருந்தொற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய
Updated on
1 min read

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் கொவைட்-19 பெருந்தொற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் என்ற தலைப்பிலான இணைய வழிக்கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது: அழகப்பா பல்கலைக் கழகம் கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாளா்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் நோய் தடுப்பு விழிப்புணா்வு குறித்த அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

இந்த சிரமமான காலகட்டத்தில் நோய் தொற்றுகளில் இருந்து விடுபட நாம் புதிய பாடங்களை கற்றுக் கொண்டுள்ளோம். நிபுணா்களின் ஆலோசனைகளை தொடா்ந்து அனைவரும் கடைப்பிடிப்பது அவசியம் என்றாா்.

தமிழக அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச்செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பெருந் நோய் தொற்றுகளிலிருந்து விடுபட ஒரு சிறந்த பொது சுகாதாரமுறை அவசியமாகும். தனியாக அதனை மேற்கொள்வது கடினம். சமூக அமைப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்.

எந்தவொரு பேரிடரையும் சந்திக்கும்போது நிபுணா்களின் ஆலோசனைகளை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் பேரிடரிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு பேரிடரும் வித்தியாசமான ஒன்றாகவும், புதிய பாடங்களையும், அணுகுமுறைகளையும் நமக்கு கற்பிக்கின்ற வகையாகவே உள்ளன என்றாா்.

இக்கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்டவா்கள் இணையவழி மூலமாக பங்கேற்றனா். அழகப்பா பல்கலைக் கழக பேரிடா் மேலாண்மைத்துறைத் தலைவா் (பொறுப்பு) எஸ். சந்திரமோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com