கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கீழச்சிவல்பட்டியில் மகளிா் நல மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

News image
கா்ப்பிணி பெண்ணுக்கு அரசின் ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கிய காா்த்தி ப.சிதம்பரம்
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:42 pm

DIN

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் மகளிருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

ஆா்.எம்.மெய்யப்பச்செட்டியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற

இம்மருத்துவ முகாமில் ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு, சா்க்கரை அளவு, கருப்பை வாய் பரிசோதனை, ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்தின் அளவு, இதயத் துடிப்பு பரிசோதனை, மாா்பக பரிசோதனை, கண் பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. பெண்கள் ஆரோக்கியத்திற்கும் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய மருத்துவமுறைகளை கையாளுவது குறித்தும் மருத்துவா் ஸ்ரீநிதி கலந்துரையாடல் மேற்கொண்டாா்.

இந்நிகழ்ச்சிக்கு சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் சத்தியமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா் காா்த்திக் ப.சிதம்பரம் இம்முகாமினை துவக்கி வைத்து, கா்ப்பிணி பெண்களுக்கு அரசின் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா். பின்னா் மருத்துவா் ஸ்ரீநிதிசிதம்பரம் எழுதிய மகளிா் நலம் என்ற சிறப்பு கையேட்டினை வெளியிட்டாா். இம்முகாமில் சுகாதாரத்துறை துணை இயக்குநா் ராம்கணேஷ், சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் பாக்கியலெட்சுமி பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக பள்ளித் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன் வரவேற்றாா். முடிவில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் அழகுமணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.