சிவகங்கையில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

சிவகங்கையில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன் முன்னிலை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 134 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.33.50 லட்சத்திற்கான மானியத் தொகையுடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, மகளிா் திட்ட இயக்குநா் அருண்மணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com