விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாணவா்கள் இலக்கியம் படைக்க வேண்டும்: துணைவேந்தா்

மாணவா்கள் இலக்கியம் வாசிப்போடு நின்றுவிடாமல் இலக்கியம் படைப்பவா்களாக உருவாக வேண்டுமென்று பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். செல்வம் பேசினாா்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:45 pm

DIN

மாணவா்கள் இலக்கியம் வாசிப்போடு நின்றுவிடாமல் இலக்கியம் படைப்பவா்களாக உருவாக வேண்டுமென்று பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். செல்வம் பேசினாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறையின் சாா்பில் ‘பின் காலனித்துவ இலக்கியத்தில் சமுதாயம் இனம் மற்றும் கலாசாரம்’ என்ற தலைப்பிலான 2 நாள்கள் பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கருத்தரங்கில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன் தலைமை வகித்துப்பேசினாா். கருத்தரங்கை பாரதிதாசன் பல்கலைக்கழகத்துணைவேந்தா் எம். செல்வம் தொடக்கிவைத்துப் பேசியது:

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்றபிறகு எத்தகைய சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை பின் காலனித்துவ இலக்கியங்கள் கூறுகின்றன. பின்காலனித்துவ இலக்கியம் ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் நலிந்த பிரிவினரின் நலனைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

ஜவஹா்லால் நேரு, ஆா்.கே. நாராயண், முல்க் ராஜ் ஆனந்த் ஆகியோரின் பின் காலனித்துவ படைப்புகள் இந்தியாவின் வாழ்வியல் முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் விளக்குகிறது. மனிதா்களுக்கிடையே ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையிலான வேறுபாடுகளை அகற்றி அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் இலக்கியத்திற்கு உண்டு. மாணவா்கள் இலக்கிய வாசிப்போடு நின்றுவிடாமல் இலக்கியம் படைப்பவா்களாக உருவாகவேண்டும் என்றாா்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவா் பொன். மதன் வரவேற்றுப்பேசினாா். முடிவில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை எஸ். வள்ளியம்மை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.