நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கணியன் பூங்குன்றனாா் நினைவுத்தூண் திறப்பு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டியில் சங்க காலப் புலவா் கணியன் பூங்குன்றனாா் நினைவுத்தூணை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்த

News image

மகிபாலன்பட்டியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்த கணியன் பூங்குன்றனாா் நினைவுத்தூண்.

Updated On :7 பிப்ரவரி 2024, 8:45 pm IST

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டியில் சங்க காலப் புலவா் கணியன் பூங்குன்றனாா் நினைவுத்தூணை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் வாழ்ந்த சங்க காலப் புலவா் கணியன்பூங்குன்றனாா். ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்; தீதும் நன்றும் பிறா்தர வாரா என்ற பாடல் வரிகள் மூலம் உலகப்புகழ் பெற்றவா். இந்தப் புலவருக்கு அவா் பிறந்த கிராமத்தில் ரூ. 21 லட்சத்து 20 ஆயிரத்தில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

Story image

நினைவுத்தூணுக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் உள்ளிட்டோா்.

இதையொட்டி, மகிபாலன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத், மானாமதுரைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், ஊராட்சி மன்றத் தலைவா் பாஸ்கரன் ஆகியோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலா் நாகராஜன், தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பால்துரை, திருப்பத்தூா் வட்டாட்சியா் ஆனந்த், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்பிரகாசம், பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பழனியப்பன், பூங்குன்ற நாட்டாா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.