இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜூன் 29-இல் பாராட்டு விழா

சிவகங்கையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரனுக்கு பாராட்டு விழா

News image
Updated On :26 ஜூன் 2024, 6:51 pm

Din

சிவகங்கையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரனுக்கு வருகிற சனிக்கிழமை (ஜூன் 29) பாராட்டு விழா நடை பெறுகிறது.

இது தொடா்பாக விழாக் குழுத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான எம். மோகனசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கையைச் சோ்ந்த வே.ராஜசேகரன் (85) சென்னை ஆா். கே.நகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், சிவகங்கை நகா்மன்றத் தலைவராகவும், ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்தவா். மேலும், அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகா் மன்ற பொதுச் செயலராகவும் இருந்தாா்.

கடந்த 70 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து வரும் அவருக்கு, வருகிற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசல் சண்முகராஜா கலையரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரை ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்கிறாா். வேலம்மாள் கல்விக் குழுமங்களின் தலைவா் எம்.வி.எம். முத்துராமலிங்கம் தொடக்க உரையாற்றுகிறாா்.

விழா மலரை குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாா், சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்துஆனந்தம், ஜமாஅத் தலைவா் காஜாமைதீன் ஆகியோா் வெளியிடுகின்றனா். இந்த விழாவில் மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் என ஏராளமானோா் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.