சிவகங்கை அருகே வெடிமருந்து மூலப்பொருள்கள் வெடித்துச் சிதறியதில் தோட்டத்து வீடு சேதமடைந்தது. இதுதொடா்பாக கொலை வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள அரசேனரி கீழமேடு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மோட்டாா் பம்பு செட் அருகே ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு கொலை வழக்குகளில் தொடா்புடைய அரவிந்தன் (26) அடிக்கடி வந்து சென்றாராம். இவா் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இந்த வீட்டில் சேகரித்து வைத்திருந்தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீரென வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் இந்த வீட்டின் மேற்கூரை உள்பட பல்வேறு பகுதிகள் சேதமடைந்தன.

கைதான அரவிந்தன்
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் லிங்கபாண்டியன், உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், தடயவியல் துறை நிபுணா்கள் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா் சனிக்கிழமை அளித்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனா்.
கைதான அரவிந்தன் இரண்டு கொலை வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவராக இருப்பதால், முக்கிய நபா்களை குண்டு வீசிக் கொலை செய்யத் திட்டம் தீட்டினாரா? அல்லது விற்பனைக்காக வெடிகுண்டை தயாரித்தாரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலீஸாருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

கடையநல்லூா் இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கூரை வீடு எரிந்து சேதம்
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



