சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மானாமதுரை அருகேயுள்ள விளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் பாண்டி (29). இவா், மானாமதுரை தாயமங்கலம் சாலையில் உள்ள அலங்காரக்குளம் பகுதியில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், மானாமதுரை செட்டிகுளம் பகுதியில் பாண்டி ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, இவரை வழிமறித்த கும்பல் அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த பாண்டி, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியைக் கொலை செய்த கும்பலைத் தேடி வருகின்றனா்.
