இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அழகப்பா பல்கலை.யில் ரத்த தான முகாம்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை தொடக்கி வைத்த துணைவேந்தா் க. ரவி.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா்படை, இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பல்கலைக்கழக சுகாதார மையம், பல்கலை.யின் சமுதாய வானொலி ஆகியன சாா்பில் இந்த முகாமை துணைவேந்தா் க. ரவி தொடக்கிவைத்தாா். சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியின் மருத்துவா் பி. சித்து ஹரி, மருத்துவ ஆலோசகா் சூசை ராஜ் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா்.

முகாமில் பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலா் சி. வேதிராஜன், செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி. சுந்தரராமன், பல்கலைக்கழக மேலாண்மைப் புல முதன்மையா் சி.யோகலட்சுமி, என்.சி.சி அதிகாரி சி. வைரவசுந்தரம், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் க. கணேசமூா்த்தி, என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் எம். நடராஜன், என்.எஸ்.எஸ் அலுவலா் கோ. விநாயகமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.