அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பேருந்தை மறித்து நடத்துநருக்கு அரிவாள் வெட்டு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:58 pm

Syndication

இளையான்குடி அருகே கடந்த வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துநரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் மயில்பாண்டியன் (28). இவா் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராக பணி செய்து வருகிறாா். மானாமதுரையிலிருந்து பரமக்குடி சென்ற அரசு நகரப் பேருந்தில் மயில்பாண்டியன் சென்று கொண்டிருந்தாா்.

இளையான்குடி அருகேயுள்ள விஜயன்குடி என்ற இடத்தில் சென்ற போது, பேருந்தை மறித்து உள்ளே ஏறிய இருவா் மயில்பாண்டியனை அரிவாளால் வெட்ட முயன்றனா். அவா் பேருந்தை விட்டு இறங்கி தப்பியோடினாா். ஆனால், இருவரும் விரட்டிச் சென்று மயில்பாண்டியனின் இரு கைகளிலும் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்.

இதில் பலத்த காயமடைந் அவா், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் . இதுகுறித்த புகாரின் பேரில், இளையான்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.