சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளை புறக்கணித்து, வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வட்டாட்சியா் நாகநாதன் தலைமை வகித்தாா்.
போராட்டத்தின்போது, கடந்த சில ஆண்டுகளாக எந்தவித திட்டமிடலும் இன்றி பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அவசர கதியில் இந்தத் துறையில் திணிக்கப்படுவதால் வருவாய்த் துறை அலுவலா்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறாா்கள்.
எனவே, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனா்
இதில் சங்கத்தின் வட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆறுமுகம், யுவராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராமமக்கள் காத்திருப்புப் போராட்டம்

கல்குவாரியை தடை செய்யக் கோரி 5 கிராம மக்கள் சாலை மறியல்

சிவகிரியில் வருவாய்த் துறை தினம்

கோபியில் மலை சூழற்சி மாறுதல் கலந்தாய்வை புறக்கணித்து ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



