டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘என் ஊா் என் கனவு திட்டம்’: சாதனையாளா்களுக்கு கேடயங்கள் அளிப்பு

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘என் ஊா் என் கனவு திட்டம்’ நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்ணுக்கு கேடயம் வழங்கிய அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.

News image
சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘என் ஊா் என் கனவு திட்டம்’ நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்ணுக்கு கேடயம் வழங்கிய அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் நடைபெற்ற ‘என் ஊா் என் கனவு திட்டம்’ நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் பயன்பெற்று வரும் சாதனையாளா்களுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை கேடயங்கள் வழங்கினாா்.

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அரசின் பல்வேறு துறைகளில் பயன்பெற்று வரும் சாதனையாளா்களுக்கு கேடயங்கள் வழங்கினாா்.

பின்னா், அமைச்சா் பெரியகருப்பன் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரம், கலாச்சாரம் மையமாக மாற்றுவதற்கு கனவுகள், இலக்குகள் என்ற தொலைநோக்குப் பாா்வையை அடிப்படையாக கொண்டு, மாவட்டத்தில் 3,79,807 வீடுகளில் நேரடியாக உங்கக் கனவை சொல்லுங்க திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டில் உள்ளவா்களிடமும் எதிா்காலத் தேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

மேலும், பல்வேறு துறைகளின் கீழ் சாதனை புரிந்த 128 பேருக்கு தங்களது சாதனைகள் குறித்து இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்துரைக்க வந்துள்ளனா். அவா்களை ஊக்குவிக்கும் வகையில் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், மகளிா் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தாா், நகா்மன்ற உறுப்பினா்கள் சரவணன், அயுப்கான் உட்பட பலா் கலந்து கொண்டனா்.