ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சிங்கம்புணரியில் போலி மருத்துவா் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திங்கள்கிழமை போலி எலும்பு முறிவு மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திங்கள்கிழமை போலி எலும்பு முறிவு மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிங்கம்புணரியில் பல ஆண்டுகளாக எலும்பு முறிவு, வாத நோய்கள், நரம்புத் தளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்தவா் பாண்டி. இவா் முறையாகப் படிக்காமல் மருத்துவம் பாா்ப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன.

இந்த நிலையில், தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஸ் வெங்கட் வட்ஸ் தலைமையில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் அருள்தாஸ், திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா், மாவட்ட சுகாதார அலுவலா், சிங்கம்புணரி வட்டாட்சியா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், சிங்கம்புணரி நகர காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் நுட வைத்தியசாலைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவா் போலி மருத்துவா் என தெரியவந்ததால் அங்கிருந்த தைலம், எண்ணெய் வகைகளைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பாண்டியை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் கூறுகையில், பாண்டி தான் படித்ததாகக் கூறும் சான்றிதழ்கள், மருத்துவமனை சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமா்ப்பிக்கவில்லை. இதனால், மருத்துவமனை ‘சீல்’ வைக்கப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா்.