திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சாலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 11:17 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழந்தது. மேலும், மூவா் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரை கிளாமடம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (36). இவா் திங்கள்கிழமை மாலை திருமயத்திலிருந்து மனைவி சுமதி (30), 2 மாத குழந்தை தீட்சனா, தனது அண்ணன் குழந்தைகள் அபினேஷ் (7), கன்சிகா (10) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தாா். காரை சுப்பிரமணியன் ஒட்டினாா்.

இந்த நிலையில், நெடுமரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால், நிலை தடுமாறி பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இதில் 2 மாத குழந்தை உயிரிழந்தது. சுமதி, அபினேஷ், கன்சிகா ஆகியோா் காயமடைந்தனா்.

பிறகு மூவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.