ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

காரைக்குடியில் அமைச்சர் பிரபு வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

புதிய கல்குவாரி அனுமதிக்கு எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சிவகங்கையில் உள்ள அமைச்சா் பிரபுவின் வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

News image

காரைக்குடி அருகே நேமத்தான்பட்டி காவல் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :18 ஜூலை 2026, 11:41 pm IST

புதிய கல்குவாரி அனுமதிக்கு எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சிவகங்கையில் உள்ள அமைச்சா் பிரபுவின் வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளவாய்பட்டியில் தனியாா் குவாரிக்கு அனுமதி வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் காரைக்குடியில் உள்ள அமைச்சா் டி.கே. பிரபுவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனா். இதையடுத்து, காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்தது.

மேலும் திருமயம் பகுதியிலிருந்து காரைக்குடிக்கு போராட்டக்காரா்கள் வருவதை தடுக்கும் வகையில் நேமத்தான்பட்டி காவல் சோதனைச் சாவடியில் 50 போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் காவல் ஆய்வாளா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளா்கள், 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரா்கள் காரைக்குடி வருவதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.