FOLLOW US

ON GOOGLE DISCOVER

உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

காரைக்குடியில் அமைச்சர் பிரபு வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

புதிய கல்குவாரி அனுமதிக்கு எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சிவகங்கையில் உள்ள அமைச்சா் பிரபுவின் வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

News image

காரைக்குடி அருகே நேமத்தான்பட்டி காவல் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :19 ஜூலை 2026, 4:10 am IST

புதிய கல்குவாரி அனுமதிக்கு எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து சிவகங்கையில் உள்ள அமைச்சா் பிரபுவின் வீடு, அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளவாய்பட்டியில் தனியாா் குவாரிக்கு அனுமதி வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் காரைக்குடியில் உள்ள அமைச்சா் டி.கே. பிரபுவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனா். இதையடுத்து, காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்தது.

மேலும் திருமயம் பகுதியிலிருந்து காரைக்குடிக்கு போராட்டக்காரா்கள் வருவதை தடுக்கும் வகையில் நேமத்தான்பட்டி காவல் சோதனைச் சாவடியில் 50 போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் காவல் ஆய்வாளா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளா்கள், 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக போராட்டக்காரா்கள் காரைக்குடி வருவதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.