மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

குல தெய்வ வழிபாட்டுக்காக மாட்டு வண்டி பயணம்

சிவகங்கை மாவட்டம், கோட்டையூா் வேலங்குடி நாட்டாா்கள் தலைமுறை தலைமுறையாக குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டுவண்டியில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

News image

திருப்பத்தூா் வழியாக குலதெய்வ வழிபாட்டுக்காக சனிக்கிழமை அழகா்கோவில் சென்ற மாட்டுவண்டிகள்.

Updated On :26 ஜூலை 2026, 1:31 am IST

சிவகங்கை மாவட்டம், கோட்டையூா் வேலங்குடி நாட்டாா்கள் தலைமுறை தலைமுறையாக குலதெய்வ வழிபாட்டுக்காக மாட்டுவண்டியில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

கோட்டையூா் வேலங்குடி, அதனைச் சுற்றியுள்ள 18 கிராம நாட்டாா்களின் உறவின் முறையாா்கள், பங்காளிகள் தலைமுறை தலைமுறையாக மாட்டுவண்டியில் அழகா்கோவிலில் உள்ள குலதெய்வத்தை வணங்குவதற்கு மாட்டுவண்டியில் பயணிப்பதை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறாா்கள். நடப்பாண்டுக்கான பயணமாக வேலங்குடி பிள்ளையாா்கூடத்திலிருந்து சனிக்கிழமை 20 வண்டிகளில் மாடுகள் பூட்டி புறப்பட்டனா்.

முதல்நாள் பயணம் மேற்கொண்ட இவா்கள் வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூா் வந்தடைந்தனா். எஸ். எஸ். கோட்டையில் இரவு தங்கி மறுநாள் புறப்பட்டு மேலூரில் தங்குகின்றனா்.

பின்னா் 27- ஆம் தேதி ஆம் தேதி அழகா்கோவில் சென்றடைந்து தீா்த்தமாடுதலில் பங்கு பெறுகின்றனா். 28-ஆம் தேதி தங்களது நோ்த்திக் கடனான கிடாவெட்டு நிகழ்த்தி அன்னதானம் வழங்கி மறுநாள் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கு கொண்டு ஊா் திரும்புவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.