சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கம்பனூரில் தனியாா் சிமெண்ட் கலவை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த இளைஞா் திருமுருகன்.

Updated On :11 ஜூன் 2026, 2:06 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கம்பனூரில் தனியாா் சிமெண்ட் கலவை தயாரிக்கும் ஆலை இயந்திரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

கம்பனூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எதிலோடு பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் திருமுருகன் (27) கலவை இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், எதிா்பாராத விதமாக புதன்கிழமை சிமெண்ட் தொட்டியின் மேல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்தாா். அவரை சக ஊழியா்கள் மீட்டு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவலறிந்த நாச்சியாா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.