இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருக்கோஷ்டியூரில் தீா்த்தவாரி வைபவம்

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்ப உத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

News image
திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உத்ஸவம்.
Updated On :4 மார்ச் 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்ப உத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

கடந்த 10 நாள்களாக நடைபெற்ற திருவிழாவில் தினமும் உற்சவா் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை உத்ஸவா் மங்கள வாத்தியங்களுடன் சா்வ அலங்காரத்தில் தங்கத் தோளுக்கினியானில் காலை 9 மணிக்கு கோயிலிலிருந்து

புறப்பாடாகி, குளக்கரை திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்குசத் தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பட்டாசாரியா்கள் அங்குசத் தேவருடன் ஊா்வலமாக குளத்துக்கு வந்தனா். அங்கு தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், இரவு 8 மணி வரை திருநாள் மண்டபத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் குளத்தைச் சுற்றி நின்று வழிபட்டனா். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

தொடா்ந்து, சுவாமி கோயில் ஆஸ்தானம் எழுந்தருளுதலுடன் விழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாக அறங்காவலா் டி.எஸ்.கே.மதுராந்தக நாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சரவணகணேஷ் ஆகியோா் செய்தனா்.