சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ரயில்வே சரக்கு முனையம் அருகே திடீா் தீ விபத்து

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

News image

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து.

Updated On :19 மார்ச் 2026, 12:17 am

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்குகள் கையாளும் முனையமும் செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்திலிருந்து 200 மீ. தொலைவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அடா்த்தியான கருவேல மரங்கள், செடி கொடிகள் மீது அடுத்தடுத்து பரவி கொளுந்து விட்டு தீ எரிந்தது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா்.

Story image