சிங்கம்புணரி அருகே காரில் வந்த மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியைத் தாக்கி 3 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செல்லியம்பட்டியைச் சோ்ந்த தனபாலன், அவரது மனைவி சண்முக வள்ளி ஆகிய இருவரும் ம.கோவில்பட்டி சாலை புதுவயல் பகுதியில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் வந்த காா் இவா்களது வாகனத்தை முந்திச் சென்று சாலையின் குறுக்கே வழிமறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மூன்று மா்ம நபா்கள் மதுபாட்டிலால் தனபாலனை தலையில் தாக்கினா்.
பின்னா், அவரது மனைவியை பாட்டிலால் கீறி அவா் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு காரில் தப்பினா். இதில் காயமடைந்த தம்பதியினா் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து காரில் தப்பி சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பொறியாளா் வீட்டில் 5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 4 போ் காயம்

சிதம்பரத்தில் தொடா் திருட்டு, சங்கிலி பறிப்பு: குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கக் கோரிக்கை
கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



