தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையிலான போட்டியில் தேனி மாவட்ட ஆடவர் அணிக்கு வீரர்கள் தேர்வு பெரியகுளம் பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கில் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழக தலைவர் பி.சி.சிதம்பரசூரியவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் நடத்தும் 18 வயதுக்குள்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான ஆடவர் கூடைப்பந்தாட்ட போட்டி ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் தேனி மாவட்ட ஆடவர் அணித் தேர்வு வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு, பெரியகுளம், தென்கரை பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இத்தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் 1.1.2000-க்குப்பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பிறந்த தேதிக்கான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூதன விழிப்புணர்வு! தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு 1 கிலோ தக்காளி!
ஈரான் அமைதி ஒப்பந்தம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!

நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர்: முன்னாள் இந்திய கேப்டன்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


