தேனி அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு முதுநிலை விஞ்ஞானி சு. திருமுருகன் தலைமை வகித்தார். பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் டி.ஜானி சதீஸ், ஹெசிமா பானு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் மாட்டுச் சாணத்தில் இருந்தும் மற்றும் தேங்காய் ஓடுகளிலிருந்தும் மதிப்புக் கூட்டப்பட்டப் பொருள்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது. சென்டேக் மாற்றுத்திறனாளி பயிற்சி பள்ளி மாணவர்கள் சாக்பீஸ், அகர்பத்தி, மெழுகுவர்த்தி தயாரித்தல் குறித்து விளக்கினார்கள். முன்னதாக, மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ம.ரம்யா சிவசெல்வி வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






