டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தேனி அருகே அதிமுக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கேபிள் தொலைக்காட்சி ஊழியரை தாக்கியதாக, அதிமுக பேரூர் செயலர் உள்பட 4 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 7:25 am IST

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கேபிள் தொலைக்காட்சி ஊழியரை தாக்கியதாக, அதிமுக பேரூர் செயலர் உள்பட 4 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சரவணன் (42). இவர், அதே ஊரைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் நடத்தி வரும் கேபிள் டி.வி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 
இந்நிலையில், மிதுன் சக்கரவர்த்திக்கும் அவரது உறவினரான அதிமுக பழனிசெட்டிபட்டி பேரூர் செயலருமான தீபன் சக்கரவர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 
இதில், பழனிசெட்டிபட்டி கிருஷ்ணன் கோயில் அருகே அதே ஊரைச் சேர்ந்த வீரமணி, மனோஜ்குமார், விவேக், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கி காயப்படுத்தியதாக, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.
இதன்பேரில், தீபன் சக்கரவர்த்தி உள்பட 4 பேர் மீது காவல் சார்பு-ஆய்வாளர் ராஜேஷ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.