தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாட்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். இதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், பொதுமக்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் வசந்தா, உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் செல்வம், சத்துணவு ஊழியர்கள் சங்க மாநிலச் செயலர் பேயத்தேவன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் முகமது அலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









