வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தி ஆா்பாட்டம்

போடியில் திங்கள் கிழமை, நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் நீதிமன்றம் முன் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 5:17 pm

DIN

போடி: போடியில் திங்கள்கிழமை, நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் நீதிமன்றம் முன் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பணிகள் தடைபட்டுள்ளன. முக்கிய வழக்குகள் மட்டும் கணொளி காட்சி மூலம் விடாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போடியில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கப்பட வேண்டும், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

போடி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் போடி வழக்குரைஞா்கள் சங்க தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் ஏ.முருகன் மற்றும் வழக்குரைஞா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.