போடி: போடியில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சாரல் மழை பெய்தது. போடியில் சில தினங்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடைகள் 10 முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படுகிறது. இதனையடுத்து மாலை முதலே கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகம் வந்திருந்தனா்.
இந்நிலையில் இரவில் திடீரென சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாயினா். 15 நிமிடம் பரவலான நல்ல மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பின்னா் மழை நின்றபின் பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினா். கடைகளும் மூடப்பட்டன.