மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கம்பம் முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கிய இளைஞர்கள் மீட்பு

முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

News image
கம்பம் முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்.
Updated On :11 ஏப்ரல் 2021, 11:26 am

DIN

முல்லைப்பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணவர்களை தீயணைப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

தேனி மாவட்டம், கம்பம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாருகேஷ்(16). இவர் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இதே தெருவைச்சேர்ந்தவர் ரூபன்(18), இவர் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நெல்லுகுத்தி புளியமரத்தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த்(17), தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

நண்பர்களான மூவரும் ஞாயிற்றுக்கிழமை கம்பம் சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டம்மன்துறை முல்லைபெரியாறு செல்லும் உத்தமுத்து தடுப்பணையில், கோடை வெயிலின் வெப்பத்தை தவிர்க்க குளித்தனர். முல்லைப்பெரியாற்றில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதில் மாணவர்கள் உற்சாகமாக குளித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தண்ணீர் அதிகரித்ததால் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் கரையேறினர். அதே நேரத்தில் மாணவர்கள் தடுப்பணையின் கீழ் நின்றதால் சிக்கிக்கொண்டனர். இதைப்பார்த்த சிலர் கம்பம் தெற்கு காவல் நிலையம், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து தடுப்பணை வெள்ளத்தில் சிக்கிய 3 மாணவர்களையும் கயிறு கட்டி மீட்டனர்.

ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது பற்றி பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அலுவலர்களிடம் கேட்ட போது, பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது, ஆதலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை, அதே நேரத்தில், 3 சிறு புனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, இவற்றில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திறந்து விட்டால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.