கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் அருகே காரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.10.90 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.90 லட்சம் பணத்தை, தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:31 pm

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.90 லட்சம் பணத்தை, தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில், பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 ஆகிய நோட்டுக் கட்டுகள் மொத்தம் ரூ.10.90 லட்சம் எந்தவித ஆவணங்களின்றி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேனி அருகே பி.சி. பட்டியைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் வீரா் செந்தில் (49) மற்றும் அவரது மனைவி கனிமொழி (45) என்றும் தெரியவந்தது.

இவா்கள் இருவரும், கோவையில் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்துச்செல்வதாகத் தெரிவித்தனா். ஆனாலும், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

அதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.90 லட்சம் பணத்தை பெரியகுளம் சாா்-நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.