உத்தமபாளையத்தில் வழக்குரைஞர் வெட்டிக்கொலை
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வாரச்சந்தை அருகே வழக்குரைஞரை பலிக்கு பலி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

உத்தமபாளையத்தில் வழக்குரைஞர் வெட்டிக்கொலை

உத்தமபாளையத்தில் வழக்குரைஞர் வெட்டிக்கொலை
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வாரச்சந்தை அருகே வழக்குரைஞரை பலிக்கு பலி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கம்பம் கூடலூர் சேர்ந்த வீரனைத் தேவர்மகன் மதன்குமார்(31) உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். இந்நிலையில் புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில் உத்தமபாளையம் வாரச்சந்தை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட மதன்குமார்
அப்போது பின்னால் காரில் வந்த ஒரு கும்பல் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது கீழே விழுந்த வழக்குரைஞரை காரிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது .இது சம்பந்தமாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 பேர் கைது:
உறவினர்களிடையே சொத்து பிரச்னை காரணமாக முன்பாக இருந்து வந்துள்ளது இது சம்பந்தமாக கடந்த ஆண்டு வழக்குரைஞர் ரஞ்சித் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் மற்றொரு வழக்கறிஞரையும் படுகொலை செய்யப்பட்டு சம்பந்தமாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...